கல்கியின் ‘சோலைமலை இளவரசி‘ – ‘தேசத் தொண்டர் குமாரலிங்கம்’, ‘சோலைமலைச் சாமியாரான’ ஓர் உருக்கமான தொடர் காதல் கதை.
தளவாய்ப் பட்டணம் கலகத்திற்குப் பின் குமாரலிங்கம் சோலைமலையின் அடிவாரத்திலுள்ள பாழடைந்த கோட்டையில் தங்க நேரிடுகிறது. அந்தக் கோட்டைக்குள் முன் எப்போதோ தான் பிரவேசித்தது அவர் நினைவுக்கு வருகிறது. விதி அவரைப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அப்போது அவர் மாறனேந்தல் யுவமகாராஜா உலகநாத சுந்தரபாண்டியத் தேவன். ஆங்கிலேயர்களின் துணையோடு சோலைமலை மகாராஜா மாறனேந்தலைக் கைப்பற்ற, உலகநாதர் தப்பிப் பிழைத்து சோலைமலைக் கோட்டைக்குள்ளேயே, சோலைமலை இளவரசி மாணிக்கவல்லியிடம் தஞ்சம் அடைகிறார்; மனதைப் பறிகொடுக்கிறார். பின் ஆங்கிலேயர்களின் வஞ்சத்தால் உயிரைப் பறிகொடுக்கிறார. இதே மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக குமாரலிங்கத்துக்கு இப்போது நடக்க, தற்போதைய சோலைமலை இளவரசி பொன்னம்மாவும், குமாரலிங்கமும் இணைந்தார்களா என்பதே ‘சோலைமலை இளவரசி’யின் மீதிக்கதை.
Solaimalai Ilavarasi is a famous tamil novel written by kalki and a good family story. actually this is a love story based on the freedom fighter kumaralingam.